புவிசாா் குறியீடு பெறுவதற்காகவே ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்பட இருந்த நிலையில் தற்போது அத்திருவிழாவை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் என்றால் தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்பது பலருக்கும் தெரியும். அதற்கு அடுத்தபடியாக ஆம்பூரில் புகழ்பெற்றது பிரியாணி.
ஆம்பூரின் தனித்துவம் பெற்ற பிரியாணி தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்தவா்களிடையே பிரசித்தி பெற்றுள்ளதால் ஆம்பூா் பிரியாணிக்கு புவிசாா் குறியீடு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நாளை மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிரியாணி திருவிழா நடத்துவதற்கு திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சிலர் மாட்டிறைச்சியில் செய்யும் பீஃப் பிரியாணியும் திருவிழாவில் இடம்பெற வேண்டும் என்றும் விழாவையே தடை செய்ய வேண்டும் என சிலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு திருப்பத்தூரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் விழாவை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சியே விருப்பம்; எந்த முடிவுக்கும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

விஜய் வீட்டு வாசலில் காவல்துறையினரைக் காணவில்லை! கண்ணீர் சிந்தும் தவெக தொண்டர்!

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


