பேரறிவாளன் விடுதலையானதைத் தொடர்ந்து அவரது தாயாரான அற்புதம்மாளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சட்டப்பேரவையில் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றியது உள்பட பல்வேறு முயற்சிகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையானதைத் தொடர்ந்து அவரது தாயார் அற்புதம்மாளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக அற்புதம்மாளிடம் நலம் விசாரித்த முதல்வர், பேரறிவாளன் விடுதலையானதன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.