எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சொந்த மாவட்டத்திற்காக அல்லது தொகுதிக்காக என்ன செய்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை என்பதால் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. விருப்பமும் இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் நாள்தோறும் அறிக்கை விடுவதில் தவறில்லை. ஆட்சியில் இருந்தபோது பழனிசாமி என்ன செய்தார்.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. சேலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஜவுளிப்பூங்கா, கொலுசு உற்பத்தி மையம், ஐடி பூங்கா அமைக்கப்படும்.
சேலம் மாவட்ட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு என்ன செய்துவிட்டார் என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.