மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை கல்லாறு வடிகால் தூா்வாரும் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில்   2-வது நாளாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளிளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து செய்து வருகிறார்.

News image
Updated On :31 மே 2022, 8:27 am

DIN

நாகை: டெல்டா மாவட்டங்களில்   2-வது நாளாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளிளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நாகை கருவேலங்கடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் 330 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் ரூ.80 கோடியில் 683 தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதில் நாகை மாவட்டத்தில் 30 பணிகள் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மே மாத முதல் வாரத்தில் பணிகள் தொடங்கின. இதனிடையே, கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூா் அணை நிரம்பியது. இதனால், குறுவை நெல் சாகுபடிக்காக முன் எப்போதும் இல்லாதவகையில், மே 24 ஆம் தேதியே மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

இதையொட்டி, ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகள் அனைத்தும் மே 31 ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டார். இதையடுத்து, காவிரி கடைமடை பகுதிகளில் நீா்நிலைகளை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகை, 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.