மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் வேகமெடுக்கிறது பலத்த மழை

சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று மீண்டும் பலத்த மழை வேகமெடுக்கிறது.

News image

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் வேகமெடுக்கிறது பலத்த மழை

Updated On :1 நவம்பர் 2022, 3:39 am

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று மீண்டும் பலத்த மழை வேகமெடுக்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அலுவலகம் செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்தது. இந்த நிலையில் அதிகாலையில் மழை லேசாக இடைவெளி விட்டிருந்த நிலையில், மீண்டும் 8 மணிக்கு தொடங்கி தொடங்கியருக்கிறது.

Story image

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், மண்ணிவாக்கம், ஆவடி, ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

அதுபோல, சென்னையில், பெரம்பூர், விருகம்பாக்கம், தாம்பரம், ராயப்பேட்டை, புரசைவாக்கம், அரும்பாக்கம், தி. நகர், கோடம்பாக்கம், கோபாலபுரம், சாலிகிராமம், ஆதம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிழக்கு தாம்பரம், வடபழனி, சைதாப்பேட்டை, அசோக் நகர், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.