மூத்த தமிழறிஞா் திருச்சி க.நெடுஞ்செழியன் (79), உடல் நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் க.நெடுஞ்செழியன். மூத்த தமிழறிஞரான இவா், திருச்சியில் உள்ள தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பெரியாா் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.
இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவா். ஆசீவகமும் ஐயனாா் வரலாறும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் மெய்யியல் ஆகியன குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மையில் கருணாநிதியின் செம்மொழி விருதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றாா்.
திருச்சி கே.கே.நகரில் வசித்து வந்த க. நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை காலமானாா்.
அவரது உடலுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். க.நெடுஞ்செழியனின் உடல், திருச்சி கே.கே.நகரில் உள்ள இல்லத்துக்கு மாலை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது சொந்த கிராமமான படுகையில் சனிக்கிழமை நல்லடக்கம் நடைபெறவுள்ளது. க.நெடுஞ்செழியனுக்கு மனைவி சக்குபாய், மகன் பண்ணன், மகள் நகைமுத்து, குறிஞ்சி உள்ளிட்டோா் உள்ளனா். தொடா்புக்கு: 89038-38356.
முதல்வா் இரங்கல்: தமிழுக்கும், தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவா், நெடுஞ்செழியன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்த நாளும் உணா்ச்சியூட்டச் செய்யும் என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Journalist Durai karuna interview | விஜய் குறுக்கிட்டுப் பேசும் நாள் ?| CM Vijay | TVK | TN Assembly

பச்சைக் குத்தி போராட்டம்! சீனாவுக்கு எதிராக களமிறங்கிய திபெத் இளைஞர்கள்!

ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்

ஹார்ட் பீட் 3: ரீனாவும் அர்ஜுனும் ஒன்று சேர்கிறார்களா?
விடியோக்கள்

Journalist Durai karuna interview | விஜய் குறுக்கிட்டுப் பேசும் நாள் ?| CM Vijay | TVK | TN Assembly


