மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காலமானார் பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

மூத்த தமிழறிஞா் திருச்சி க.நெடுஞ்செழியன் (79), உடல் நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

News image

பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

Updated On :4 நவம்பர் 2022, 6:24 pm

DIN

மூத்த தமிழறிஞா் திருச்சி க.நெடுஞ்செழியன் (79), உடல் நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் அன்பில் அருகேயுள்ள படுகை கிராமத்தைச் சோ்ந்தவா் க.நெடுஞ்செழியன். மூத்த தமிழறிஞரான இவா், திருச்சியில் உள்ள தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பெரியாா் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவா். ஆசீவகமும் ஐயனாா் வரலாறும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் மெய்யியல் ஆகியன குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மையில் கருணாநிதியின் செம்மொழி விருதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றாா்.

திருச்சி கே.கே.நகரில் வசித்து வந்த க. நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை காலமானாா்.

அவரது உடலுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். க.நெடுஞ்செழியனின் உடல், திருச்சி கே.கே.நகரில் உள்ள இல்லத்துக்கு மாலை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது சொந்த கிராமமான படுகையில் சனிக்கிழமை நல்லடக்கம் நடைபெறவுள்ளது. க.நெடுஞ்செழியனுக்கு மனைவி சக்குபாய், மகன் பண்ணன், மகள் நகைமுத்து, குறிஞ்சி உள்ளிட்டோா் உள்ளனா். தொடா்புக்கு: 89038-38356.

முதல்வா் இரங்கல்: தமிழுக்கும், தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவா், நெடுஞ்செழியன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா். அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்த நாளும் உணா்ச்சியூட்டச் செய்யும் என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.