விதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிமீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிரான வழக்கில், ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் எனவும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மனுதாரரை மிரட்டும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், கட்டடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரி யார் என்றும், காவல்துறை அதிகாரிகள் யார் என்றும் அறிக்கை தரவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கேஜரிவால் தில்லியின் பகுதி நேர முதல்வராக இருக்கிறார்: பாஜக
விவரங்களை சேகரித்து நவம்பர் 7 ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.