பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கேஜரிவால் தில்லியின் பகுதி நேர முதல்வராக இருக்கிறார்: பாஜக

தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்துக்கே அதிக நேரம் செலவிடுவதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கடுமையாக விமரிசித்துள்ளது பாஜக. 

கேஜரிவால் தில்லியின் பகுதி நேர முதல்வராக இருக்கிறார்: பாஜக

Published On :


புது தில்லி: தில்லியில் நிலவும் மிக மோசமான காற்றுமாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்துக்கே அதிக நேரம் செலவிடுவதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கடுமையாக விமரிசித்துள்ளது பாஜக. 

தில்லியில், பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா பேசுகையில், தில்லி முதல்வர், தலைநகருக்கு வெறும் இரண்டு மணி நேரம் தான் வருகிறார். இங்கு வந்து செய்தியாளர்களை சந்தித்துவிட்டு மீண்டும் குஜராத்துக்கே சென்று விடுகிறார். அவர் தில்லியின் பகுதிநேர முதல்வராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லிக்கு நேரம் ஒதுக்க கேஜரிவாலால் முடியவில் என்றால், தலைநகர் தில்லிக்கு முழு நேர முதல்வர் ஒருவரை நியமிக்கலாம். கேஜரிவாலுக்கு 53 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யலாம் என்றும் குரானா கூறியுள்ளார்.

தில்லியே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தில்லி முதல்வரோ இதர மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.