சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று பிற்பகலில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் வெளியாகி பிறகு மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கும்.
அந்த வகையில், 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
தேர்வு அட்டவணை இன்று வெளியானதும், மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கும் தேர்வு அட்டவணை வெளியானதும் பொறுப்புடன் பாடங்களைப் படிக்கத் தொடங்குவதும் வழக்கம் என்று கூறப்படுகிறது.