வரும் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் திருநாளான தைப் பொங்கல் வரும் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அதற்கு முன்னதாக நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு திமுக அரசு 23 பொருள்கள் அடங்கிய பொருள்களை மக்களுக்கு வழங்கியது. ஆனால், தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் முறைகேடு நடந்ததாகவும் பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்க முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு இதுகுறித்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை: ஓ. பன்னீர்செல்வம்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! இந்தியா வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

