ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை விழிப்புணர்வு பாடல்: சிறுமியை தேடிக் கண்டுபிடித்துப் பாராட்டிய சைலேந்திர பாபு

கானா பாடல் மூலம் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மிக அழகாகப் பாடும் விடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

News image
சாலை விழிப்புணர்வு பாடல்: சிறுமியை தேடிக் கண்டுபிடித்துப் பாராட்டிய சைலேந்திர பாபு
Updated On :10 நவம்பர் 2022, 10:50 am

DIN

சென்னை: கானா பாடல் மூலம் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மிக அழகாகப் பாடும் விடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமீரா ஜாய்ஸ் என்ற சிறுமி, பள்ளிச் சீருடையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானா பாடல் ஒன்றைப் பாடியிருந்தார்.

அந்த விடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, அந்த சிறுமி யார்? எங்கே இருக்கிறார்? என்பது பற்றிய தகவலை காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளத்தில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், அந்தச் சிறுமியின் தகவல் கிடைத்து, அவரைத் தேடிக் கண்டுபிடித்து சென்னைக்கு வரழைத்து நேரில் பாராட்டியிருக்கிறார் சைலேந்திர பாபு. 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  கானா பாடல் பாடிய இளங்குயிலைக் கண்டுபிடித்து விட்டோம். 13 வயது ஜாய்ஸ், அவரின் கனவு நனவாக வாழ்த்துகள் என்று சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்திலும் விடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

கருத்து மிக்க பாடலை பிழையின்றி பாடி அசத்திய சிறுமிக்கும், திறமை எங்கிருந்தாலும் அதனைத் தேடிக் கண்டுபிடித்து பாராட்டியிருக்கும் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.