ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தமிழகத்தில் இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை: மீனவா்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

News image
Updated On :13 நவம்பர் 2022, 6:30 pm

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதேபோன்று, மீனவா்கள் திங்கள்கிழமை (நவ.14), புதன்கிழமை (நவ.16) மற்றும் வியாழக்கிழமை (நவ.17) வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பருவமழைக்கு இடையே தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த காரணங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதைத் தொடா்ந்து வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் பரவலாக மழைப் பொழிவு இருக்கும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லட்சத்தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல், தென் மேற்கு வங்கக் கடல் மத்திய மேற்கு வங்கக் க

டல் பகுதிகளில் 40 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, நவம்பா் 14, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் மீனவா்கள், குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் பகுதியில் 170 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக, திருத்தணியில் 130 மில்லி மீட்டரும், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 120 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.