குன்னூர் ராணுவ வெடி மருந்து ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலையில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான வெடிமருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 8 ஊழியர்களும் வேகமாக ஓடியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிலருக்கு லேசான உராய்வு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தையடுத்து அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.