மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் என்னவாகும்?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image

ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் என்னவாகும்?

Updated On :22 நவம்பர் 2022, 1:03 pm IST


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு தென்கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

இது மெல்ல மேற்கு- வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா  - வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் மழை பெய்து ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, அடுத்த 6 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரம், வட தமிழகம்-புதுவையை நோக்கி நகரும். பின்னர் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.22) இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, மீனவா்கள் ஆந்திரக் கடலோர பகுதிகளுக்கும், தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கும், இலங்கைக் கடல் பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பருவமழைக்கு இடையே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காரணங்களால் தமிழகத்தின் நான்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரக் கடலோர பகுதி, தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதி, இலங்கைக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அங்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.