Enable Javscript for better performance
புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

    By DIN  |   Published On : 15th October 2022 12:24 PM  |   Last Updated : 15th October 2022 12:24 PM  |  அ+அ அ-  |  

    rupees1

    மகாராஷ்டிரத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ.6.3 கோடி மோசடி: 33 பேர் மீது வழக்கு


    புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 4 சதவீதம் c அறிவிக்கப்பட்டது.

    கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயா்த்தப்பட்டதையடுத்து, புதுச்சேரியிலும் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு செயல்பாட்டுக்கு வந்தது.

    அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவித்து கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரி அரசு உத்தரவிட்டது.  

    இதையும் படிக்க | இந்தியாவும், சீனாவும் தான் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடுகள்: ரஷிய அதிபர் புதீன்

    இந்நிலையில், புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    34 சதவீதமாக உள்ள ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, 38 சதவீதமானது. இதற்கான உத்தரவை புதுவை அரசின் நிதித் துறை சாா்புச் செயலா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் பிறப்பித்தாா்.

    இந்த அகவிலைப்படி உயா்வானது கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இதுதொடா்பான உத்தரவு அரசு, அரசு சாா்புத் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாகவும் அனுப்பிவைக்கப்பட்டது.

    அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதி நிா்வாகத் தலைமை அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயா்வு குறித்த விவரம் அனுப்பிவைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp