அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தீபாவளி இனாம் கேட்ட நாமக்கல் தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்!

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனியார் ஆலய அதிபரிடம் தீபாவளி இனாம் கேட்டதாக அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

News image

தீயணைப்பு வீரர் திருமுகம்

Updated On :17 அக்டோபர் 2022, 12:42 pm IST

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனியார் ஆலய அதிபரிடம் தீபாவளி இனாம் கேட்டதாக அவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் நல்வினை செல்வன். இவர் தனியார் சாக்குப் பை ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர் திருமுகம் அவரிடம் கைப்பேசி வழியாக தீபாவளி இனாம் கேட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட நல்வினை செல்வன் அவரை கண்டித்ததுடன், இனாம் கேட்ட ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.செந்தில் குமார் வீரர் திருமுகத்திடம் விசாரணை மேற்கொண்டு, அதன் பிறகு திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

நைனாமலை பெருமாள் கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த போது தீயணைப்பு வீரர் திருமுகம் அவரிடம் இனாம் கேட்டு உரையாடலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.