தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளைத் தண்டிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
விஜயகாந்த்
விஜயகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, போலீசாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்த சம்பவம், காலத்துக்கும் அழியாத ஒரு பழியைத் தமிழகத்துக்கு ஏற்படுத்திவிட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாம் பாா்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற ஒரு சம்பவத்தை நாம் வாழும் காலத்தில் கண்முன்னே கண்டது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த 13 பேருக்கு உரிய நீதி கிடைக்க நீதிபதிகள் வழிவகை செய்ய வேண்டும். உண்மையில் யாா் தவறு செய்தவா்கள் என்பதை கண்டறிந்து குற்றம் செய்தவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com