கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி விசாரணை

கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் இன்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி விசாரணை
Updated on
1 min read

கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் இன்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

கொடநாடு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 போ் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பங்களாவில் இருந்த பல்வேறு பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சயான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.ஜி. சுதாகா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு சசிகலா, முன்னாள் எம்எல்ஏ வி.சிஆறுக்குட்டி உள்பட 316க்கும் மேற்பட்டவா்களிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் வழக்கை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையிடம் விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று கொடநாடு எஸ்டேட்டுக்கு நேரில் வந்த சிபிசிஐடி டிஜிபி விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com