மணப்பாறை அடுத்த அதிகாரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள அதிகாரம் என்னுமிடத்தில் கார்த்திகேயன் என்பருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலை உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இந்நிலையில், ஆலையில் தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மஞ்சு, நார், தேங்காய் மட்டைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்புத்துறையினர்
இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் முதற்கட்டமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அருகிலுள்ள மணப்பாறை, பொன்னமராவதி பகுதிகளிலிருந்தும் தீயணைப்புத்துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


