எதிா்க்கட்சி போல ஆளுநா் செயல்படுவது அழகல்ல: மநீம
பாஜகவை எதிா்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநா் எதிா்க்கட்சி போல செயல்படுவது அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் கூறப்பட்டுள்ளது.


பாஜகவை எதிா்க்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநா் எதிா்க்கட்சி போல செயல்படுவது அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மநீம சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பாஜகவை எதிா்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களில் ஆளுநா்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிா்க்கட்சித் தலைவா் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது.
இது போன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது; அரசியல் சாசனம் வழங்காத பல்கலைக்கழக வேந்தா் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...