சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை: பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் மாணவர்கள்

சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் காலம் கடந்து விடுமுறை அறிவித்துள்ளதால் பேருந்து நிலையங்களில் மாணவர்
சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை: பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் மாணவர்கள்
Updated on
1 min read

சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் காலம் கடந்து விடுமுறை அறிவித்துள்ளதால் பேருந்து நிலையங்களில் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ,கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், திருக்கடையூர் தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 63.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.தொடர் மழையின் காரணமாக வியாழக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில், காலம் கட்ந்து 8 மணிக்கு மேல் விடுமுறை அறிவிப்பு வெளியானதால் கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பேருந்துகள் மற்றும் மிதிவண்டிகளில் வந்து சேர்ந்தனர். 

பள்ளிக்கு சென்ற பின்னரே பள்ளி விடுமுறை என்பது தெரிய வந்ததால் பலர் மழையில் நனைந்தபடியே பேருந்து நிலையத்திற்கு சென்றனர், அதேபோல் மிதிவண்டியில் வந்த மாணவர்களும் மழையில் நனைந்து கொண்டே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, இனிவரும் காலங்களிலாவது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com