நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தக்காளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ. 45 ஆக விற்பனையாகி வருகிறது.

News image
Updated On :5 செப்டம்பர் 2022, 9:50 am IST


சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ. 45 ஆக விற்பனையாகி வருகிறது. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகம் மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது. 

இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து  கோயம்பேடு சந்தைக்கு அண்டை மாநிலங்கள் கேரளம், ஆந்திரம், கர்நாடகத்தில் இருந்து தக்காளி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து 90 லாரிகளில் வரும் தக்காளி தற்போது 45 இருந்து 40 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. மேலும், இன்று திங்கள்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதாலும் தக்காளி தட்டுப்பாடும் நிலவி வருகிறது. 

இதையும் படிக்க | சென்னையில் டீசல் தட்டுப்பாடு?
 
இதனால் ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று திங்கள்கிழமை கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் தொடர் மழை நீடித்து வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.20 ஆக விற்பனையான தக்காளி இரண்டு நாள்களில் கிடுகிடுவென உயர்ந்து ரூ.45 ஆக விற்பனை செய்யப்பட்டுவது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.