ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு முறையும் திருப்தியுடனே தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய எனது அருமை சகோதரரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனக் குறிப்பிட்டார்.