ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு

ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு (கோப்புப்படம்)
ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு (கோப்புப்படம்)


ராமநாதபுரத்தில் இன்று நள்ளிரவு முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் 144 தடை உத்தரவானது, வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை சுமார் இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு நாள், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்துக்குள், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி உள்ளே நுழைய தடை விதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com