டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கூடங்குளம் அணு உலை வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 செப்டம்பர் 2022, 3:34 pm IST

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கை எப்போது தாக்கல் செய்ய முடியும் என 2 வாரத்தில் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளம் அணு உலை மையத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகள் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்கும் விவகாரத்தில் மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாச நீட்டிப்புக் கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கலான மனு மீது எதிா்மனுதாரரான ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கூடங்குளம் அணுஉலை தொடா்பாக ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதில், 15 நிபந்தனைகளை விதித்து அணு உலை செயல்பட அனுமதி அளித்தது. 

அதில் முக்கியமான நிபந்தனையாக அணுக் கழிவுகளை நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதற்கான ஆழ்நில கழிவு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அதுவரை அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது குறிப்படத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.