கலை, அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நீட் தேர்வு வேண்டாம் என முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
பொறியியல் கல்லூரியில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதல்வர் அறிவித்து உள்ள நான் முதல்வன் திட்டம் மூலம் கலை, அறிவியில் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
தொழில் முனைவர்களாக மாற்றும் வகையில் உலம், பன்னாட்டு அறிவியல் குறித்தும் கல்வி கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
இதையும் படிக்க | கடல் தாயை பாதுகாப்பது நமது கடமை: மத்திய இணையமைச்சர் எல். முருகன்