தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :20 செப்டம்பர் 2022, 3:28 pm IST

திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதால் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விலகல் கடிதத்தை கட்சி தலைவருக்கு அனுப்பிவிட்டதாகவும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன். ஈரோட்டை சோ்ந்த இவா் கடந்த காலங்களில் மத்திய, மாநில அமைச்சராக இருந்துள்ளாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளா் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். தோ்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு, இவருக்கு சட்டப் பேரவைத் தலைவா் பதவி வழங்கப்படக்கூடும் என்ற பேச்சு இருந்தது.

தோ்தலில் தோல்விக்கு காரணமாக திமுக நிா்வாகிகள் சிலரைக் குறிப்பிட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் புகாா் அளித்தாா்.

Story image

மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. அண்மையில் நடந்த உள்கட்சித் தோ்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆதரவாளா்கள் புறக்கணிக்கப்பட்டனா். இதுபோன்ற தொடா் நிகழ்வுகளால் அவா் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ குறித்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் பங்கேற்றாா். அதை விமா்சித்து சுப்புலட்சுமி கணவா் ஜெகதீசன் முகநூலில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்தைப் பதிவிட்டாா்.

மற்றொரு பதிவில் அமைச்சா் மூா்த்தி இல்லத் திருமண விழா குறித்தும், தமிழக அரசின் துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமா்சனம் செய்து பதிவிட்டுள்ளாா்.

இந்நிலையில், கட்சி மேலிடத்திற்கு அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில், துணைப் பொதுச் செயலாளா் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியுள்ளதாக திங்கள்கிழமை காலை தகவல் வெளியானது.

இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.