சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக இணையம் முழுவதும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஷி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் விடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி
மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை கைப்பற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் சமூக ஊடகங்களில் விடியோ வெளியாகியுள்ளது. அதாவது, ராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நகரத்தின் அருகில் இருக்கும் ஹுவான்லை முதல் ஷாங்ஜியாகோவ் வரை சுமார் 80 கிலோ மீட்டருக்கு வரிசை கட்டி நிற்பதாகவும், இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மற்றும் உயர் அதிகாரி ஷி ஜின்பிங், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதே காரணம் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
#PLA military vehicles heading to #Beijing on Sep 22. Starting from Huanlai County near Beijing & ending in Zhangjiakou City, Hebei Province, entire procession as long as 80 KM. Meanwhile, rumor has it that #XiJinping was under arrest after #CCP seniors removed him as head of PLA pic.twitter.com/hODcknQMhE
â Jennifer Zeng æ¾é (@jenniferatntd) September 23, 2022
கிடைத்திருக்கும் முதற்கட்ட தகவல்களில் இருந்து, சீனாவிலிருந்து பரவி வரும் இந்த தகவல்களை உறுதி செய்ய இயலவில்லை. முன்னதாக, சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு, இரண்டு கம்யூனிஸ்ட் உயர் அதிகாரிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
இந்த தீர்ப்பு குறித்து வெளியான ஊடகத் தகவல்களில், சீன அதிபர் ஷி ஜின்பிங், தனது கட்சியின் முக்கிய நபர்களை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் மூன்றாவது முறையாக சீனத்தில் ஆட்சியைப் பிடிக்க எடுத்திருக்கும் வியூகம் என்று தெரிவித்திருந்தது. அக்டோபர் 16ஆம் தேதி, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை நடத்தவும், இந்த மாநாட்டில், ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில்தான் சீன அதிபர் ஷி ஜின்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
அதுபோல, சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக உலக முன்னணி ஊடகங்களில் இதுவரை எந்த செய்தியும்/தகவலும் வெளியாகவில்லை. இதைக் கொண்டே சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் புரளியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட தகவலாகப் போகலாம்.
ஒரு வேளை, சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், சீனாவின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் இருக்கும் அனைவரும் மாற்றப்படுவார்கள். இதனால், சீனத்தின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி போன்றவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம். இதனால் சீனத்திலிருந்து வரும் பொருள்களை நம்பி இந்தியாவில் நடைபெறும் பல தொழிற்சாலைகள் பாதிக்கப்படலாம். உதிரிபாகங்கள் பற்றாக்குறை, சிப் பற்றாக்குறை போன்றவை ஏற்படலாம். கரோனா காலத்திலும் இது நடந்தது.
ஆனால், இது தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம். இந்த ஆட்சி மாற்றத்தால், சீனத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நாடலாம். சீனத்தில் தற்போது தொழில் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூட இந்தியாவுக்கு மாற்றப்படலாம். எனவே, தற்காலிகமாக சில பாதிப்புகளை பொருளாதார ரீதியாக எதிர்கொண்டாலும், இந்தியாவுக்கு எதிர்காலப் பலன்கள் அதிகம் என்றே பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு இல்லை!

ஓடிடியில் கவனிக்கப்படாத சாய் அபயங்கரின் முதல் திரைப்படம்!

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க 90% வாய்ப்பில்லை! டிரம்ப் பரபரப்பு தகவல்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



