
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (ஏப்.16) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், கட்சியில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல், உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் உரிய அடையாள அட்டையோடு செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.