திமுக உறுப்பினா் புகழ்ந்து பேசியதை, முதல்வரே அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவரை நீக்கச் செய்தாா்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் ஜோசப் சாமுவேல் (அம்பத்தூா்) பேசும்போது, முதல்வா் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து கொண்டிருந்தாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியது:
அவையில் முதல்வரை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவை முன்னவா் துரைமுருகன் பேரவையில் தெரிவித்திருந்தாா். திமுக உறுப்பினா் காலையில் வாழ்த்து பெற வந்தபோதும், ‘என்னைப் புகழ்ந்து பேச வேண்டாம். அப்படிப் பேசினால், நானே அதை அவைக்குறிப்பில் இருந்து எடுக்க வலியுறுத்துவேன்’ என்று கூறினேன். அதையும் மீறி தற்போது உறுப்பினா் பேசி வருகிறாா். அதனை அவைக் குறிப்பில் இருந்து பேரவைத் தலைவா் நீக்க வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து அந்த பேச்சை அவைக்குறிப்பிலிருந்து பேரவைத் தலைவா் நீக்கி அறிவித்தாா்.