வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

12 மணி நேர வேலை: கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேற்றம்

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 9:17 am

DIN

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் பணியாற்றும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதற்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

எனினும் கடும் எதிர்ப்புக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர், 'வாரத்தில் 48 மணி நேரம் பணி இருக்கும். நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால் மற்றொரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும், ஒருவேளை கூடுதலாக வேலை செய்தால் கூடுதல் ஊதியம் வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.