கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வெள்ளக்கோவிலில் எலக்ட்ரோபதி கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் எலக்ட்ரோபதி கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image

வெள்ளக்கோவில் முத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

Updated On :25 ஏப்ரல் 2023, 7:00 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் எலக்ட்ரோபதி கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகே கம்பளியம்பட்டி சாலையில் ஸ்ரீ செல்வநாயகி எலக்ட்ரோபதி மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் நான்கரை ஆண்டு பி.இ.எம்.எஸ், 2 ஆண்டு எம்.டி, லேப் டெக்னீசியன், செவிலியர் துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. தற்போது 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த நிறுவனம் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினீத்துக்குப் புகார் சென்றுள்ளது. 

இதையடுத்து மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநர் கனகராணி தலைமையில் வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கல்வி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

நிறுவனத் தலைவர் தரண்யா, முதல்வர் பாலசுப்பிரமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனை செயல்பாட்டுக்கான சான்றிதழ் போலி எனத் தெரிய வந்ததால் மருத்துவமனை, கல்வி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 

இந்நிலையில் மருத்துவமனை செயல்பட நீதிமன்ற உத்தரவு உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் தங்களுடைய நடவடிக்கைகளைக் கைவிட்டு கல்வி நிறுவனம், மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.