ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இறந்த மகளின் ஜீவனாம்சத்தை தாய் பெற உரிமையுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத்தொகை பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 1:12 pm

DIN

இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத்தொகை பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுராந்தகத்தைச் சேர்ந்த அண்ணாதுறை-சரஸ்வதி தம்பதி விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சமாக மாதம் ரூ.7,500 வழங்க அண்ணாதுரைக்கு மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 6.22,500 பாக்கி தொகையை வழங்க கோரிய சரஸ்வதியின் மனு நிலுவையில் இருந்தபோது சரஸ்வதி மரணமடைந்துவிட்டார். 

சரஸ்வதி மரணமடைந்ததால், தாயார் ஜெயாவை வழக்கில் இணைத்ததை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவைத்தொகை பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.  

அத்துடன் அண்ணாதுரை தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.