தமிழ்நாட்டில் தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தமிழக அரசு , நியாயவிலைக் கடைகள் மற்றும் 67 பண்ணை பசுமைக் கடைகள் மூலமாக குறைவான விலைக்கு(கிலோ ரூ. 60) தக்காளி விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஆக.2-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதையும் படிக்க | கன்னத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க என்ன செய்யலாம்?
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் ரூ. 120க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று ரூ. 100 ஆகக் குறைந்த நிலையில் இன்றும் முதல் ரகம் ஒரு கிலோ ரூ. 100-க்கும் மேலும் தரத்திற்கேற்ப ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில்ரூ.60- க்கும் பழனி மார்க்கெட்டில் ரூ.40-க்கும் விற்கப்படுகிறது.
வேலூரில் சில பகுதிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்பனை ஆகிறது.
மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
சில்லறை விற்பனைக் கடைகளில் சந்தை விலையைவிட சற்று அதிகமாக விற்கப்படுகிறது.
தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அடுத்த வாரத்தில் தக்காளி விலை மேலும் குறையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.