திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி
திருமலை: ஆந்திரம் மாநிலம் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியத்தில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு அலிபிரி மலைப்பாதையில் திருமலைக்கு சென்றுகொண்டிருந்தபோது லட்ஷிதா(6) என்ற சிறுமி பிஸ்கட் பாக்கெட் வாங்குவதாகக் கூறி சில படிகள் முன்னால் சென்றுள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவள் முன்னால் இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் சென்றுள்ளனர். ஆனால் சிறிது நேரம் கழித்து சிறுமியை தேடியும் காணவில்லை.
இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட வனத் துறையினர், லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே வனப்பகுதியில் சனிக்கிழமை காலை காயங்களுடன் சிறுமியை சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியத்தில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.