சென்னை: திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான ‘தகைசால் தமிழா்’ விருதை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
தகைசால் தமிழா் விருது, 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.