ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் ஏராளமானோர் கடலில் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். இதனால் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடாந்து கால சந்தி பூஜையாகி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பின் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.
படிக்க: பாபா குகையில் ரஜினி!
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் கடலில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு புரோகிதர் முன்னிலையில் தர்ப்பணம் செய்தும் சுவாமியை வழிபட்டனர். இதனால் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.