மத்திய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
இந்நிலையில் அவர் ராமநாதபுரம் செல்லும் வழியில், மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க | லே, லடாக் பகுதிகளுக்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி!
அதுபோல சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முரசொலி மாறனின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.