ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதிகளுக்கு இரு நாள்கள் பயணமாக ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) செல்கிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார்.
அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் பேசி வருகிறார்.
இதையும் படிக்க | தொல். திருமாவளவன் பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
அந்தவகையில், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இருமுறை சென்றும் லடாக் பகுதிக்குச் செல்லவில்லை.
இதையடுத்து லடாக் பகுதிகளுக்கு இரு நாள்கள் பயணமாக ராகுல் காந்தி செல்வதாகவும் தில்லியில் இருந்து இன்று காலை அவர் புறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.