திருச்சி: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி வழங்கினால் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதியுள்ளாா்.
இதையும் படிக்க | அப்துல்கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
இந்த நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி வழங்கினால் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் முதல்வர் தலைவர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது மட்டும் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, முக்கொம்பு காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்த நிலையில் கர்நாடக அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனா். பின்னர், முக்கொம்பு கதவணை பகுதியில் படகு மூலம் ஆற்றுக்குள் சென்ற விவசாயிகள், தடுப்பணையின் 11 மற்றும் 12 மதகுகள் இடம்பெற்றுள்ள பகுதிக்கு சென்று தண்ணீரில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளவியல் ஆலோசனை அவசியம்!

வணிக சிலிண்டா்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்: மேற்காசிய போா் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

உலகைச் சுற்றி...

17 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



