47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ஆளுநர் இரங்கல்!

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 4:44 am

DIN

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, லடாக்கில் எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில், ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 

மிகுந்த துயரமான இந்நேரத்தில் என் எண்ணங்கள் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை நினைக்கிறது. விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லடாக்கின் லே பகுதியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.