சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தீவுத் திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது.
தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்காக 55 கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.