மின் இணைப்பு பெயா் மாற்றம் சிறப்பு முகாம்: செப். 25 வரை நீட்டிப்பு

வீடு மற்றும் பொது மின் இணைப்பு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்டம்பர் 25 வரை நீடிக்கப்படுவதாக மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு பெயா் மாற்றம் சிறப்பு முகாம்: செப். 25 வரை நீட்டிப்பு


வீடு மற்றும் பொது மின் இணைப்பு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் செப்டம்பர் 25 வரை நீடிக்கப்படுவதாக மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் செய்ய ஏதுவாக கடந்த ஜூலை 24 முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது. ஒரு மாதம் நடைபெறவிருந்த இந்த சிறப்பு முகாம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்து.

தமிழகம் முழுவதும் மின் வாரியத்தால் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயா் மாற்றம் முகாம் இன்றுடன் நிறைவு பெறவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மின் நுகா்வோா் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும், மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும், தமிழகம் முழுவதும் சிறப்பு பெயா் மாற்றும் முகாமை மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. 

இதன்படி கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள (2,811) அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் இந்த முகாமில், மின் நுகா்வோா்கள் தங்களுக்கு உரிய ஆதார் எண், வாரிசு சான்று, சொத்து வரி ரசீது நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன், அதற்கான கட்டணமாக ரூ.708-ஐ சமா்ப்பித்து, மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்திருந்தது.

இந்த சிறப்பு முகாமில், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால், உடனடியாக பெயர் மாற்றம் செய்து தரப்படுகிறது.

இன்னும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறப்பு முகாமில், இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com