சென்னையில் ஜெ.ஜெ. நகர், அண்ணா நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீரடைந்தது.
அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், சிந்தாதிரிபேட்டை, ராயப்பேட்டை பகுதிகளிலும் சீராகியுள்ளது. கீழ்பாக்கம் மணலி, பெரியார் காலனி, நியுகெளத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் சீரானது.
கிண்டி, ராமபுரம், போரூர், அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், தொட்டியம்பாக்கத்தில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் கனமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் விநியோகம் சென்னையில் தற்போது மழை குறைந்ததை அடுத்து சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.