சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு!

சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள பங்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு!

சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள பங்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக அதிகளவிலான டீசல்களை மக்கள் வாங்கிச் செல்வதால் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தில் பழுதாகி அங்காங்கே நிற்கும் கார்களுக்கு பெட்ரோலை கேன்களில் வாகன ஓட்டிகள் வாங்கிச் செல்வதால் பெட்ரோலின் இருப்பும் குறைந்து வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com