திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து தம்பதி பலி!

திருச்சியில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் முழுமையாக சேதம் அடைந்த கார்.
கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் முழுமையாக சேதம் அடைந்த கார்.
Published on
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் மேல் வெள்ளிக்கிழமை(டிச.9) காலை வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், காரில் இருந்த கேரளம்  மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதையும் படிக்க | தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மருத்துவமனையில் அனுமதி
 
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது. 

கேரளம் மாநில பதிவெண் கொண்ட கார், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் முழுமையாக சேதம் அடைந்த கார் தற்போது கார் மீட்கப்பட்டு உள்ளது. 

மேலும் விபத்தில் பலியான தம்பதியின் உடல் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com