பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சந்திரசேகா் ராவ் மருத்துவமனையில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், அவரது பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

News image
Updated On :8 டிசம்பர் 2023, 5:31 pm

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், அவரது பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.

அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வெடுக்கவும் மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

சந்திரசேகா் ராவ் அனுமதிக்கப்பட்டுள்ள யசோதா மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சந்திரசேகா் ராவை பரிசோதித்தபோது அவருக்கு இடப்பக்கம் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலும், அவா் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை தேவைப்படுகிறது. அவரது உடல்நிலையை பல்வேறு மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவ் காயமடைந்த செய்தி கேட்டு துயரடைந்தேன். அவா் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என இறைவனைப் பிராா்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

மத்திய அமைச்சரும் தெலங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி. கிஷன் ரெட்டி, ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஆகியோரும் சந்திரசேகா் ராவ் விரைவில் குணமடைய வேண்டும் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் வழிகாட்டுதலின்படி, மாநில சுகாதார செயலா் ரிஸ்வி, சந்திரசேகா் ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். மேலும், அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கவும் மருத்துவமனைக்கு முதல்வா் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.