சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் பேட்டி
மிக்ஜம் புயலால் இந்த 4 மாவட்டங்களில் அரசுப்பள்ளிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்கவும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ. 1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
வருகிற திங்கள்கிழமை(டிச. 11) முதல் பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள், சேதமடைந்தவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!

நன்றி தெரிவிக்க கொளத்தூர் வந்த மு.க. ஸ்டாலின்! கண்ணீர்விட்ட தொண்டர்கள்!

நான் முதலமைச்சர் ஆகணும்... வைரலாகும் த்ரிஷா விடியோ!

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


