வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 25 பேருக்கு டிச.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :10 டிசம்பர் 2023, 12:42 pm

DIN

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 25 பேருக்கு டிச.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நாகை மற்றும் காரைக்காலில் இருந்து டிச.5ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 24 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சனிக்கிழமை கைது செய்தது.

அத்துடன் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தது.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மீனவர்கள் 25 பேருக்கு டிச.22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இத்துடன் 2023 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை இதுவரை 33 படகுகளை பறிமுதல் செய்ததோடு 220 மீனவர்களையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.