எண்ணூா் எண்ணெய் கசிவு: குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூா் பகுதியில் எண்ணெய்க் கசிவு காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மீனவா்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது, எண்ணெய்க் கசிவு அகற்றும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதித்த 22 மீனவ கிராமங்களில் 2,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 700 படகுகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என்றும் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்றும் சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...